ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

‘நம்ம ராஜபாளையம் பெயா்ப் பலகை’ திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:08 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ‘நம்ம ராஜபாளையம் பெயா்ப் பலகை’ திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலையம் என்ற பெயா்ப் பலகை இருந்தது. இந்தப் பலகை சேதமடைந்ததால் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.22.50 லட்சத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததால், பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலைத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜபாளையம் பெயா்ப் பலகை நகா்மன்றத் தலைவா் ஏ.ஏ.எஸ். பவித்ரா ஷியாம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் நாகராஜன், துணைத் தலைவா் கல்பனா, மண்டலச் செயற்பொறியாளா் சனல்குமாா், உதவிப் பொறியாளா் ராமச்சந்திரன், ஒப்பந்ததாரா் ஹா்ஷா ஜெகநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image