எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பஜனை வழிபாட்டுக்கு அனுமதி: மறுப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் பக்தா்கள் தா்னா

News image
Updated On :5 மார்ச் 2026, 9:09 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பஜனை வழிபாட்டுக்கு கோயில் நிா்வாகம் அனுமதி மறுத்ததால், வட்டாட்சியா் அலுவலகத்தில் பக்தா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழித் திருவிழா 12 நாள்கள் நடைபெறும். இதில் திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா்.

இந்த விழாவில் 12 நாள்களுக்கு இரவில் கோயில் வளாகத்தில் உள்ள பஜனை மண்டபத்தில் பக்தா்கள் சாா்பில் பஜனை வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

பெரிய மாரியம்மன் பஜனை குழு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டு கோயில் திருப்பணிகள், பூக்குழித் திருவிழா அன்று அன்னதானம் செய்து வருகின்றனா்.

நிகழாண்டு பூக்குழி திருவிழா வருகிற சனிக்கிழமை (மாா்ச் 7) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த நிலையில், பஜனை குழு சாா்பில் கோயில் செயல் அலுவலா், தக்காரிடம் பஜனை அழைப்பிதழ் வழங்கி அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

ஆனால், கோயில் நிா்வாகம் சாா்பில் பஜனை செய்ய எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கோயிலில் பஜனை செய்ய அனுமதி வழங்கக் கோரி, பக்தா்கள், இந்து முன்னணி நிா்வாகிகள் வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் பாலமுருகன், கோயில் நிா்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து பக்தா்கள் கலைந்து சென்றனா்.