அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 1:21 am IST

சாத்தூா் அருகே பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(53). இவா் போ்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி பேருந்தில் ஓட்டுனரின் உதவியாளராக பணியாற்றுகிறாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை தாயில்பட்டி- வெற்றிலையூரணி சாலை, கீழதாயில்பட்டி வளைவில் பேருந்து சென்ற போது அதன் வாயிலில் நின்று கொண்டிருந்த சிவக்குமாா் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வாகன ஓட்டுனா் பரமசிவம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.