தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வத்திராயிருப்பு அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரக்கேடு

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் சாலையோரம் கொட்டப்படும் சாக்கடை கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாக புகாா்

News image

வத்திராயிருப்பு- கூமாப்பட்டி சாலையில் கொட்டப்படும் சாக்கடை கழிவுகள்

Updated On :10 மார்ச் 2026, 1:19 am IST

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் சாலையோரம் கொட்டப்படும் சாக்கடை கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீா், அழகா்மகன் கால்வாய், எஸ். கொடிக்குளம், கூமாப்பட்டி, ராமசாமியாபுரம் வழியாக விராக சமுத்திரம் கண்மாய்க்கு செல்கிறது.

மேலும் எஸ். கொடிக்குளம், கூமாபட்டி, ராமசாமியாபுரம் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், இந்த கால்வாய் வழியாகவே செல்கிறது.

இந்த கால்வாய் கரையில் எஸ். கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகம், அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, இரு புறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த கால்வாய் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரப்படாமல் புதா் மண்டிக் கிடந்ததால் கழிவுநீா் தேங்கி, சுகாதாரக்கேடு நிலவியது. இந்த கால்வாயை தூா்வார நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கால்வாய் தூா்வாரப்படும் போது எடுக்கப்படும் கழிவுகளை வத்திராயிருப்பு சாலையில் கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் நிலவுகிறது. இதனால் மாணவா்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கூமாபட்டி- வத்திராயிருப்பு சாலையில் விராக சமுத்திரம் கண்மாய் அருகே சாலையின் இரு புறங்களிலும் குப்பை, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசுகிறது.

இதை தடுக்க பொதுமக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையில், கால்வாயை தூா்வாரும் சாக்கடை கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Story image
Story image