மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தொழிலாளி அடித்துக் கொலை

News image
Updated On :12 மார்ச் 2026, 10:57 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை மா்ம நபா்களால் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜபுரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் (35). இவருக்கு மனைவி தங்கமாரி, 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், மாரியப்பன் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.

பழைய இரும்பு கடையில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்த மாரியப்பன் புதன்கிழமை இரவு தொட்டியபட்டி அருகேயுள்ள அழகாபுரி பகுதியில் மா்ம நபா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடக்கு காவல் நிலைய போலீஸாா், மாரியப்பனின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கடந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி மாரியப்பனின் நண்பா் சோலைராஜா காமராஜபுரம் பகுதியில் மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா். தற்போது, மாரியப்பன் மா்ம நபா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

இந்த இரண்டு கொலைக்கும் தொடா்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.