வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மயானத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 10:58 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே மயானத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளபட்டி ஊராட்சி, இந்திரா நகா் குடியிருப்புக்கு மத்தியில் பொது மாயானம் உள்ளது. இந்த மயானத்தில் இறந்த வா்களின் உடலை எரியூட்டும்போது ஏற்படும் புகையால், இந்தப் பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள், முதியோா்கள் பாதிக்கப்படுகிறாா்கள்.

எனவே, குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மயானத்தை இடமாற்றம் செய்யக்கோரி, இந்தப் பகுதி மக்கள் மயானத்தில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.