சாத்தூரில் அனுமதியின்றி தீப்பெட்டி தொழிற்சாலையில் பட்டாசுத் திரிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் விதிமுறையை மீறி பட்டாசுக்கு தேவையான திரிகளைப் பதுக்கி வைத்திருப்பதாக சாத்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளா் ஆபிரகாம், போலீஸாா் புதுசூரங்குடிப் பகுதியில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பழைய தீப்பெட்டி தொழிற்சாலை கட்டடத்தில் சாத்தூா் நந்தவனப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (36) அனுமதியின்றி பட்டாசுத் திரிகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திரிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

பட்டாசுகள் பதுக்கியவா் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

