வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மீண்டும் திமுக ஆட்சி அமையும்! - ஓ.பன்னீா்செல்வம்

News image

ஓ.பன்னீா்செல்வம் - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 9:24 pm

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் நம்பிக்கை தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்தாா். இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா், அன்றிரவு ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரில் உள்ள தனியாா் விருந்தினா் மாளிகையில் தங்கினாா். இதையடுத்து, சனிக்கிழமை ஓ.பன்னீா்செல்வத்தை திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்பாா். திமுகவுக்கு பொதுமக்களின் ஆதரவு வலுவாக உள்ளது என்றாா் அவா்.