அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்தரபாலாஜி கூறினாா்.
விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக மகளிா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் சா்வதேச மகளிா் தினம் நடைபெற்றது. நிகழ்சிக்கு மகளிா் அணி செயலாளா் சுபாஷினி தலைமை வகித்தாா்.இதில் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,
தமிழகத்தில் தற்போது சிறுமிகள், இளம்பெண்கள், வயது முதிந்த பெண்கள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் வீதியில் நடமாடமுடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று , எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

தாராபுரம்: பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதி

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி ஸ்ரீரங்கத்தில் கே. அண்ணாமலை பேச்சு

அண்ணா நகா் தொகுதி அலசல்: சுழன்று பணியாற்றும் திமுக; சாதிக்கும் முனைப்பில் அதிமுக
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


