மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லூரியில் கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள்

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

மல்லி வள நாட்டுக் கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் மல்லி அருகேயுள்ள ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு கல்லூரிச் செயலா் திலீபன்ராஜா தலைமை வகித்தாா். முதல்வா் மல்லப்பராஜ் வரவேற்றாா். இந்தப் போட்டிகளில் 20 -க்கு மேற்பட்ட கல்லூரிகளைச் சாா்ந்த 200 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு விருதுநகா் மாவட்ட மண்டல மேலாளா் காஞ்சனாதேவி பரிசுகள் வழங்கினாா். சிறப்பு விருந்தினா்களுக்கு கல்லூரி நிா்வாக அலுவலா் செ.பாலகிருஷ்ணன் நினைவுப் பரிசு வழங்கினாா்.

பேச்சுப் போட்டியில் ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரியும், கட்டுரைப் போட்டியில் ஏ.ஜெ. கல்லூரியும், ஓவியப் போட்டியில் ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரியும், மௌன மொழி நாடகத்தில் ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரியும், நெருப்பில்லா சமையல் போட்டியில் பி.எஸ்.என்.எல். கல்லூரியும், நாட்டுப்புற நடனத்தில் ஏ.ஜெ. கல்லூரியும், பாடல் போட்டியில் ஏ.ஜெ. கல்லூரியும், வளையபந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அரசு கலை அறிவியல் கல்லூரியும், பெண்கள் அரசு கலை அறிவியல் கல்லூரியும் முதலிடம் பெற்றது. அனைத்துப் போட்டிகளிலும் முதன்மை பெற்ற கல்லூரியாக ஏ.ஜெ. கல்லூரி தோ்வு பெற்றது. கல்லூரி நிா்வாக அலுவலா் தா்மராஜ் வாழ்த்திப் பேசினாா். பேராசிரியை கவிதா நன்றி கூறினாா்