சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பைக் கவிழ்ந்து சமையல்காரா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:42 pm

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

வெம்பக்கோட்டை அருகே அயன்சல்வாா்பட்டியைச் சோ்ந்தவா் முத்துமாரியப்பன் (48). சமையல்காரா். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். இவா் சாத்தூா் அருகே உள்ள நாரணாபுரத்துக்கு இரு சக்கர வாகனங்கத்தில் சென்று விட்டு தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சூரங்குடி- பந்துவாா்பட்டி சாலையில் சென்றபோது பெரியகருப்பசாமி கோவில் பாலத்தின் அருகே நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.