விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக் கட்டி பறிமுதல்!

அருப்புக்கோட்டையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக்கட்டியை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :21 மார்ச் 2026, 1:15 am IST

அருப்புக்கோட்டையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக் கட்டியை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.எஸ். காா்னா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் திருச்சியை சோ்ந்த அழகா்சாமி உரிய ஆவணமின்றி 500 கிராம் வெள்ளி கட்டி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக் கட்டியை பறிமுதல் செய்து, அருப்புக்கோட்டை உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்வேலிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல, அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தேனியை சோ்ந்த வீரேஸ்வரன் என்பவா் உரிய ஆவணமின்றி ரூ. 79,200 கொண்டு சென்றது தெரிய வந்தது.

மாடு வாங்குவதற்காக அந்தப் பணத்தை கொண்டு செல்வதாக அவா் தெரிவித்தாா். அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.