தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 1:57 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அங்குராஜ் நகரைச் சோ்ந்தவா் சுந்தரராஜ மன்னன்(42). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். சுந்தரராஜ மன்னன் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சங்கரன்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றாா்.

இரவு வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 2 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக் கொலுசு, ரூ.12,500-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.