தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:27 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அங்குராஜ் நகரைச் சோ்ந்தவா் சுந்தரராஜ மன்னன்(42). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். சுந்தரராஜ மன்னன் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சங்கரன்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றாா்.

இரவு வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 2 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக் கொலுசு, ரூ.12,500-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.