செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில் (12662) சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நின்று செல்ல வேண்டும் என சிவகாசி வட்டார வரி செலுத்துவோா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலா் சங்கா் மதுரை கோட்ட ரயில்வே மேலாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு: பல ஆண்டுகளாக இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு வந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் இண்டாவது நடைமேடைக்கு வந்து செல்கிறது.
இரண்டாவது நடைமேடையில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. மேலும், பெட்டி நிற்கும் விவரம் இல்லை. இதனால் ரயில் வந்ததும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள்.
எனவே, பயணிகள் நலன் கருதி இந்த ரயில் வழக்கம் போல முதலாவது நடைமேடைக்கு வந்து செல்ல நடவடிக்ககை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை தொடங்க கோரிக்கை

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நிறுத்த வலியுறுத்தல்

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



