வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிவகாசி முதல் நடைமேடையில் பொதிகை விரைவு ரயில் நின்று செல்லக் கோரிக்கை

செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில் (12662) சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நின்று செல்லுமாறு கோரிக்கை

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 7:06 pm

செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில் (12662) சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நின்று செல்ல வேண்டும் என சிவகாசி வட்டார வரி செலுத்துவோா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து அந்த சங்கத்தின் செயலா் சங்கா் மதுரை கோட்ட ரயில்வே மேலாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு: பல ஆண்டுகளாக இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு வந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் இண்டாவது நடைமேடைக்கு வந்து செல்கிறது.

இரண்டாவது நடைமேடையில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. மேலும், பெட்டி நிற்கும் விவரம் இல்லை. இதனால் ரயில் வந்ததும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள்.

எனவே, பயணிகள் நலன் கருதி இந்த ரயில் வழக்கம் போல முதலாவது நடைமேடைக்கு வந்து செல்ல நடவடிக்ககை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.