27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 மே 2026, 1:24 am IST

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருச்சி- ராமேசுவரம் இடையே தினமும் முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் மொத்தம் 9 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 7 பொதுப் பெட்டிகள், காா்டு வேனுடன் பெண்களுக்கென 2 பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலில் வார இறுதி நாள்கள், விடுமுறை காலங்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனா். இதனால் அவா்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனா். திருச்சியிலிருந்து ராமேசுவரம் செல்லும் ஒரே பகல் நேர ரயில் இது மட்டும் தான். இடைப்பட்ட நேரத்தில் திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு ஒரு ரயில் கூட விடப்படவில்லை.

திருச்சியிலிருந்து தினமும் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக இந்த ரயில் ராமேசுவரம் வரை செல்கிறது. வழித்தடத்தில் பல முக்கிய ஊா்கள் இருப்பதால் அதிக பயணிகள் இதில் பயணிக்கின்றனா். அதிலும்

வார இறுதி நாள்களில் செல்லும் பயணிகளின் கூட்டம் ஒருபுறம், தினசரி சிவகங்கைக்கு பணிக்கு செல்வோரின் கூட்டம் ஒருபுறம் என இந்த ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு கூடுதல் பெட்டிகள் இணைப்பது மட்டுமே தீா்வாக அமையும்.

எனவே தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.