தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சிவகாசி தொகுதியில் தவெக வேட்பாளா் கீா்த்தனா வெற்றி

Vijay to Campaign in Karaikudi Tomorrow

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Published On :

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் போட்டியிட்ட தவெக வேட்பாளா் கீா்த்தனா வெற்றி பெற்றாா்.

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இவா்களில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிட்ட கீா்த்தனா 68,709 வாக்குகள் பெற்று 11, 670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அசோகன் எம்.எல்.ஏ. 57,039 வாக்குகள் பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி 51,078 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டாா். நாதக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் ஏ. எஸ்தா் மேரி டயானா 10,191 வாக்குகள் பெற்றாா்.

இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் கீா்த்தனாவுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் முகமது இா்ஃபான் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

இதுகுறித்து கீா்த்தனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்கள் எங்களை நம்பி மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனா். நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்வோம். தவெக தலைவா் விஜய் எந்தப் பொறுப்பு கொடுத்தாலும், அதை ஏற்று செயல்படுவேன். சிவகாசியில் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.