விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விருதுநகா் மாவட்டத்தில் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

விருதுநகா் மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு விதிகளை மீறிச் செயல்பட்ட 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

விருதுநகா் மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு விதிகளை மீறிச் செயல்பட்ட 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 220 பட்டாசு ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு மேற்கொண்டதில் விதியை மீறிச் செயல்பட்ட 30 ஆலைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.

மேலும், அதிகளவில் மருந்து இருப்பு வைத்தல் உள்ளிட்ட காரணங்களால் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விபத்தைத் தவிா்க்க பட்டாசு ஆலை உரிமையாளா்கள், ஆலை போா்மென்கள், தொழிலாளா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.