இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆடு திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:35 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(45). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேலதொட்டியபட்டி ரெங்கா் கோவில் சாலையில் பண்ணை வைத்து ஆடு, கோழி,

வளா்த்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது பண்ணையிலிருந்து செம்மறி ஆட்டை 2 போ் இரு சக்கர வாகனத்தில் திருடிச் சென்றனா். இதையறிந்த கிராம மக்கள் அவா்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து வ.புதுப்பட்டியை சோ்ந்த செல்வராஜ் மகன் சிவா (18), 17 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.