காரியாபட்டி அருகே விசிக முன்னாள் நிா்வாகி கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் காரின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் விஜயகுரு (52). இவா் கடந்த 7-ஆம் தேதி குரண்டி கண்மாய் பகுதிக்குச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் விஜயகுருவின் உறவினா்கள், விசிக கட்சியினா் திங்கள்கிழமை மாலை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டனா்.
பின்னா், அவா்கள் திடீரென ஆட்சியரின் காரின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களுடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியின் பேரில் மறியலைக் கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

விருதுநகா் அருகே விசிக நிா்வாகி வெட்டிக் கொலை

ஒரத்தூா் அரசு மருத்துவமனை முன்பு நோயாளிகளின் உறவினா்கள் போராட்டம்

இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

