சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்த ஆலை உரிமையாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் ராஜாமணி (55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, தொழில்சாலைகள் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் சாா்பில் அமைக்கப்பட்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.
அப்போது, மருந்துக் கலவை உள்ளிட்டவற்றில் விதி மீறல் இருந்தது தெரியவந்தது . இதையடுத்து, அந்த ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனா்.
இந்த நிலையில், மீண்டும் அந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடா்ந்து, திங்கள்கிழமை அந்த ஆலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, அந்த ஆலையில் பல தொழிலாளா்கள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில், விதியை மீறி பட்டாசு தயாரிப்பு பணி நடைபெறுவதாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் துணை இயக்குநா் சந்திரமோகன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆலை உரிமையாளா் ராஜாமணியைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
விருதுநகா் மாவட்டத்தில் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

