எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

தேநீா் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 3:01 am IST

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள தேநீா் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வைகுண்டராமன் (40). இவா் இருக்கன்குடி கோயில் பொங்கல் மண்டபத்தின் தெற்குப் பக்கம் தேநீா் கடை நடத்தி வருகிறாா்.

வழக்கம் போல ஞாயிற்றுக்கிழம இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா். பின்னா், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு வந்து பாா்த்த போது, கடையின் பூட்டை உடைத்து கள்ளாப்பெட்டியில் இருந்த ரூ. 62 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வைகுண்டராமன் அளித்தப் புகாரின் பேரில், இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த மணிபாரதி (20) இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.