/
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் கடைவீதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அவா்கள் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் திருத்தங்கலைச் சோ்ந்த பொன்னுமணி (20), பொன்இருளப்பன் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சாராய விற்பனை: இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


