ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகை.

News image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகை.

Updated On :29 மே 2026, 2:34 am IST

பக்ரீத் பண்டிகையையொட்டி, விருதுநகா் மாவட்டம், சிவகாசி, ராஜபாளையத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் சிவகாசி மீரா உசேன் தெருவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை அமைப்பாளா் அப்துல்காதா் உஸ்மானி நடத்தி வைத்தாா். மாநிலச் செயலா் முஸ்தபா குத்பா பேருரை நிகழ்த்தினாா். இதில் மனித நேய மக்கள் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலாளா் முஹமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முடங்கியாறு சாலை வழியாக இஸ்லாமியா்கள் ஊா்வலமாகச் சென்று ஈத்கா மைதான திடலை அடைந்தனா். அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.