வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சாரல் மழையால் ஓடைகளில் நீா்வரத்து: சதுரகிரிக்கு சென்ற பக்தா்கள் மகிழ்ச்சி

வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள் .

News image

வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள் .

Updated On :29 மே 2026, 2:35 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா் வரத்து ஏற்பட்டதால், பிரதோஷ வழிபாட்டுக்குச் சென்ற பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு, தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து மாங்கனி ஓடை, மலட்டாறு, சங்கிலிப்பாறை உள்ளிட்ட நீரோடைகளை கடந்து 7 கி.மீ. தொலைவு மலைப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டும். கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா் வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். வைகாசி மாத பிரதோஷத்துக்காக சதுரகிரி மலையேறிச் சென்ற பக்தா்கள் ஓடைகளில் குளித்து விட்டு, சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினா்.

சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி சுவாமிகளுக்கு மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் 400- க்கும் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image
Story image