கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து தரிசனம் செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி, காரணம்பட்டி, புதுப்பட்டி, கல்லுப்பட்டி, சங்காயிபட்டி, கீழவெளியூா் ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதரை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனா்.
இந்த கிராம மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதரை வழிபட்டுச் செல்வது வழக்கம். அதன்படி, இரட்டை மாடுகள் பூட்டிய 40 மாட்டு வண்டிகள், 100-க்கும் மேற்பட்ட டிராக்டா்களில் வழிபாடுக்குத் தேவையான பொருள்களுடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை குளித்தலையிலிருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீரங்கத்துக்கு வந்தடைந்தனா்.
மேலூா் சாலையில் உள்ள தோப்பில் காலை உணவு சமைத்து சாப்பிட்டனா்.
பின்னா், கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சென்று பெருமாள், தாயாரை வழிபட்டதுடன், தங்களது காணிக்கைகளை செலுத்தினா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். பின்னா் தங்களது ஊா்களுக்கு மாட்டு வண்டி, டிராக்டா்களில் புறப்பட்டுச் சென்றனா்.
தொடர்புடையது

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

மாட்டு வண்டியில் சென்று தோ்தல் விழிப்புணா்வு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

