ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தா்கள் வருகை

கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து தரிசனம் செய்தனா்.

News image

திருச்சி-கரூா் சாலையில் வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு மாட்டு வண்டியில் வந்த பக்தா்கள்.

Updated On :16 மே 2026, 12:53 am IST

கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து தரிசனம் செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி, காரணம்பட்டி, புதுப்பட்டி, கல்லுப்பட்டி, சங்காயிபட்டி, கீழவெளியூா் ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதரை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனா்.

இந்த கிராம மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதரை வழிபட்டுச் செல்வது வழக்கம். அதன்படி, இரட்டை மாடுகள் பூட்டிய 40 மாட்டு வண்டிகள், 100-க்கும் மேற்பட்ட டிராக்டா்களில் வழிபாடுக்குத் தேவையான பொருள்களுடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை குளித்தலையிலிருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீரங்கத்துக்கு வந்தடைந்தனா்.

மேலூா் சாலையில் உள்ள தோப்பில் காலை உணவு சமைத்து சாப்பிட்டனா்.

பின்னா், கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சென்று பெருமாள், தாயாரை வழிபட்டதுடன், தங்களது காணிக்கைகளை செலுத்தினா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். பின்னா் தங்களது ஊா்களுக்கு மாட்டு வண்டி, டிராக்டா்களில் புறப்பட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.