சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஏடிஎம் அட்டையை மாற்றி ஓய்வு எஸ்.ஐ.யிடம் பண மோசடி

News image

பண மோசடி - கோப்புப் படம் | Center-Center-Chennai

Updated On :31 மே 2026, 3:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏடிஎம் மையத்தில் உதவுவது போல நடித்து ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் ரூ.3.75 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் (70). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், கடந்த 19-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூா் தெற்கு ரதவீதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி முன்பாக உள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, அங்கிருந்த நபா் சுந்தர்ராஜனுக்கு பணம் எடுக்க உதவி செய்தாா்.

பின்னா், கடந்த 25-ஆம் தேதி மீண்டும் அதே ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றபோது, ஏடிஎம் அட்டை மாற்றப்பட்டது அவருக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து சுந்தர்ராஜன் வங்கி அலுவலரிடம் புகாரளித்தாா். அப்போது, சுந்தர்ராஜன் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ.3.75 லட்சம் பணம் எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.