என்றாலும் இக்காலத்தில் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பலர் முனைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதில் ஐஏஎஸ் அதிகாரிகளும் அடக்கம். இறையன்பு, உதயசந்திரன், ஜவஹர், வி.பழனிச்சாமி, எஸ்.நாகராஜ் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள், சைலேந்திரபாபு போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாரும் செல்கிற இடமெல்லாம் புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்கிறார்கள். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாணவர்கள் மத்தியில், குழந்தைகள் மத்தியில் புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து வருகிறார்.