""முதலில் எல்லாம் நமதுநாட்டில் தொற்றுநோய்கள்தாம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. சுதந்திரம் அடைவதற்கு முன்பு - ஏன் அதற்கு 300 ஆண்டுகளுக்கும் முன்பு கூட- காலரா, அம்மை, ப்ளேக் போன்ற நோய்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஓரே நேரத்தில் மாண்டு போன சம்பவங்கள் உண்டு. இறந்தவர்களைத் தனித்தனியாக அடக்கம் செய்ய முடியாமல் மொத்தமாகப் புதைத்தனர். எரித்தனர். அந்த அளவுக்குத் தொற்று நோய்களால் கடுமையான பாதிப்புகள் இருந்தன. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்பு, பொது சுகாதாரம் முன்பைவிட மேம்பட்டதையடுத்து தொற்றுநோய்களால் நாம் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் அதற்கு எந்தவிதத்திலும் குறையாமல் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறோம்'' என்கிறார் சிவராமன்.