""இட்லி, தோசை, சப்பாத்தி, ரசம், அப்பளம் எல்லாம் கிடைக்கும்'' என்ற அவர் நமது திகைப்பைப் பார்த்ததும்,"" ஆனால் இந்த எல்லா உணவுகளிலும் மூலிகை கலக்கப்பட்டிருக்கும். கேழ்வரகு இட்லி, முடக்கத்தான் தோசை, வல்லாரை தோசை, மணத்தக்காளி தோசை எல்லாம் கிடைக்கும். ஆவாரம் பூ சாம்பார் கிடைக்கும். மணத்தக்காளி ரசம், சோற்றுக் கற்றாழைக் குழம்பு என்று வித்தியாசமான உணவுகள் கிடைக்கும். இனிப்பு வகைகளில் கூட நாங்கள் மூலிகைகளைக் கலக்கிறோம். தினை அல்வா, முருங்கைக்காய் அல்வா, பனங்கருப்பட்டி பால்கோவா என்று இனிப்புகளையும் எங்கள் உணவகத்தில் பரிமாறுகிறோம்'' என்கிறார் வீரபாபு.