மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிட்ஸ்...

உத்தரப்பிரதேசம்,  ஜார்க்கண்ட் மாநிலங்களில் முன்ஜாமீன் வாங்க முடியாது.  1975-ஆம்  ஆண்டு  அவசர நிலை காலத்தில்  உத்தரப்பிரதேசத்தில் முன்ஜாமீன்

Updated On :21 ஆகஸ்ட் 2018, 6:20 am


உத்தரப்பிரதேசம்,  ஜார்க்கண்ட் மாநிலங்களில் முன்ஜாமீன் வாங்க முடியாது.  1975-ஆம்  ஆண்டு  அவசர நிலை காலத்தில்  உத்தரப்பிரதேசத்தில் முன்ஜாமீன் வழங்கும் விதிகள் எடுக்கப்பட்டன.  அதில் இருந்து உத்தரகாண்ட்  பிரிந்தபோது அங்கும்  அப்படியே தொடர்கிறது.

சிம்லாவிலுள்ள திறந்தவெளிச் சிறையில் கைதிகள் வெளியே சென்று தொழில் நடத்திவிட்டு  இரவு சிறைக்குத் திரும்பலாம்.  அதுமட்டுமல்ல; இந்தச் சிறையில்  செய்யப்படும் உணவு மிக நன்றாக இருப்பதால் அதை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடிக்குமாம்.

"பெற்றால்தான் பிள்ளையா?' இது படத்தின் பெயரல்ல.  ஒய்.ஜி.பி  குழுவினர் நடத்திய நாடகத்தின் பெயர்.  இதுதான் பிறகு  "பார் மகளே பார்'  என்னும் திரைப்படமாக ஆனது.

"குலேபகாவலி'  படத்தில் வரும்  "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ'  என்னும் பாடல்  "கூண்டுக்கிளி'  படத்திற்காக எழுதப் பட்டது.  ஆனால், அப்படத்தில் இடம் பெறாமல்  பிறகு  "குலேபகாவலி'யில் இடம் பெற்றது.

இந்தியாவின் முதல் "கண் வங்கி'  சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டது. முதல் கண் மாற்று அறுவைச் சிகிச்சையும் இங்குதான் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.