புற ஊதாக் கதிர்கள் மூலம் கரோனா தீநுண்மியை அழிக்க முடியும் என்ற அடிப்படையில் பல கருவிகள் வந்துவிட்டன. குளிர்சாதனப் பெட்டி வடிவில் வந்துள்ள ஒரு கருவியின் உள்ளே பொருள்களை வைத்துவிட்டால் கரோனா தீநுண்மியை சில நிமிடங்களுக்குள் அது அழித்துவிடும்.
வீட்டில் உள்ள மேசை, சோபா, கதவு, ஜன்னல் ஆகியவற்றை அந்தக் கருவிக்குள் எப்படி வைக்க முடியும்? இவற்றையெல்லாம் தூய்மைப்படுத்த வீடு முழுக்க பரவும்விதமாக புற ஊதாக்கதிர்களைச் செலுத்த வேண்டும். அது மனிதர்களின் மீது பட்டால் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும்.
இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லாத, "எக்ஸ் 5 ஸ்டெர்லைஸிங் வாண்ட்' என்ற "தூய்மையாக்கும் கோல்' ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
புற ஊதாக் கதிர்கள் மூலம் இயங்கும் இந்த தூய்மையாக்கும் கோல், 99.9 சதவீதம் பாக்டீரியாக்கள், தீநுண்மிகளை அழித்துவிடுகிறது.
பேட்டரி மூலம் இந்தக் கருவியை ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டால் 10 ஆயிரம் மணி நேரங்கள் பயன்படுத்த முடியும். இந்தக் கருவியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர் வெளிச்சத்தை சோபா, கதவு, புத்தகம், ரூபாய் நோட்டுகள், துணிகள், மவுஸ், கம்ப்யூட்டர் என தூய்மையாக்கப்பட வேண்டிய பொருள்களின் மீது காட்டினால் 3 நிமிடங்களில் அவைதூய்மையாகிவிடும்.
தூய்மைப்படுத்தப்பட்டவுடன் இந்தக் கருவி தானாகவே இயங்குவதை நிறுத்திக் கொள்ளும். புற ஊதாக் கதிர்கள் மனிதர்களின் மீது படும்போது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், குழந்தைகள் இதைப் பயன்படுத்தாமல் தடுக்கும் முறையும் இதில் உள்ளது.
புற ஊதாக்கதிர்களைப் பார்த்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான கண்ணாடியும் இந்தக் கருவியுடன் தரப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாசிப்பு பெற்றோா் வழியாக வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்! - எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன்

பெண்ணின் உடலை புதைக்க கிராமத்தினா் எதிா்ப்பு! சடலத்துடன் வட்டாட்சியரகம் திரண்ட உறவினா்கள்!

டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் செயல்படும் வணிக வளாகக் கடைகளை காலி செய்ய உத்தரவு

இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிக்கை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



