பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தூய்மையாக்கும் கோல்!

புற ஊதாக் கதிர்கள் மூலம் கரோனா தீநுண்மியை அழிக்க முடியும் என்ற அடிப்படையில் பல கருவிகள் வந்துவிட்டன.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:00 am IST

புற ஊதாக் கதிர்கள் மூலம் கரோனா தீநுண்மியை அழிக்க முடியும் என்ற அடிப்படையில் பல கருவிகள் வந்துவிட்டன. குளிர்சாதனப் பெட்டி வடிவில் வந்துள்ள ஒரு கருவியின் உள்ளே பொருள்களை வைத்துவிட்டால் கரோனா தீநுண்மியை சில நிமிடங்களுக்குள் அது அழித்துவிடும்.

வீட்டில் உள்ள மேசை, சோபா, கதவு, ஜன்னல் ஆகியவற்றை அந்தக் கருவிக்குள் எப்படி வைக்க முடியும்? இவற்றையெல்லாம் தூய்மைப்படுத்த வீடு முழுக்க பரவும்விதமாக புற ஊதாக்கதிர்களைச் செலுத்த வேண்டும். அது மனிதர்களின் மீது பட்டால் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும்.

இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லாத, "எக்ஸ் 5 ஸ்டெர்லைஸிங் வாண்ட்' என்ற "தூய்மையாக்கும் கோல்' ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

புற ஊதாக் கதிர்கள் மூலம் இயங்கும் இந்த தூய்மையாக்கும் கோல், 99.9 சதவீதம் பாக்டீரியாக்கள், தீநுண்மிகளை அழித்துவிடுகிறது.

பேட்டரி மூலம் இந்தக் கருவியை ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டால் 10 ஆயிரம் மணி நேரங்கள் பயன்படுத்த முடியும். இந்தக் கருவியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர் வெளிச்சத்தை சோபா, கதவு, புத்தகம், ரூபாய் நோட்டுகள், துணிகள், மவுஸ், கம்ப்யூட்டர் என தூய்மையாக்கப்பட வேண்டிய பொருள்களின் மீது காட்டினால் 3 நிமிடங்களில் அவைதூய்மையாகிவிடும்.

தூய்மைப்படுத்தப்பட்டவுடன் இந்தக் கருவி தானாகவே இயங்குவதை நிறுத்திக் கொள்ளும். புற ஊதாக் கதிர்கள் மனிதர்களின் மீது படும்போது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், குழந்தைகள் இதைப் பயன்படுத்தாமல் தடுக்கும் முறையும் இதில் உள்ளது.

புற ஊதாக்கதிர்களைப் பார்த்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான கண்ணாடியும் இந்தக் கருவியுடன் தரப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.