கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இரவில் வீட்டில் படுத்ததே இல்லை

ஒரு முறை உடல் நலம் சரி இல்லாமலிருந்த உப்பு சத்தியாகிரக போராட்ட வீரர் சர்தார் வேத ரத்தினத்தைப் பார்த்த அவரின் குடும்ப டாக்டர், "ஆறு மாத காலத்திற்கு நீ உன் வீட்டுப் படியை விட்டு வெளியே இறங்கக் கூடாது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

தங்க. சங்கரபாண்டியன்


ஒரு முறை உடல் நலம் சரி இல்லாமலிருந்த உப்பு சத்தியாகிரக போராட்ட வீரர் சர்தார் வேத ரத்தினத்தைப் பார்த்த அவரின் குடும்ப டாக்டர், "ஆறு மாத காலத்திற்கு நீ உன் வீட்டுப் படியை விட்டு வெளியே இறங்கக் கூடாது. இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு இருப்பதாக ஒப்புக்கொண்டால் தான் நான் உனக்கு வைத்தியம் செய்வேன்' என்றார். 

சர்தார் வேதரத்தினத்துக்கும் அந்த நிபந்தனைக்கு உட்படுவது தான் அப்போது செய்யக்கூடிய காரியமாக இருந்தது. ""ஆகட்டும் டாக்டர்'' என்று ஒப்புக் கொண்டார்.

சிகிச்சை தொடங்கிற்று. அந்த டாக்டரின் திறமையான சிகிச்சையால் வேதரத்தினம் வெகு விரைவில் நல்ல உடல் நலத்தை மீண்டும் அடைந்தார்.

வேத ரத்தினம் தம் வாழ்நாளிலேயே அந்த ஒரே ஒரு தடவை தான் சேர்ந்தாற் போல 6 மாத காலம் தம் சொந்த வீட்டில் படுத்திருந்தார்.

பிற்காலத்தில் அவருடைய வாழ்வின் பெரும் பகுதி நாள்கள் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்வதிலேயே கழிந்தது. வேதாரண்யத்தில் தங்க நேர்ந்த ஒரு சில நாள்களிலும் இரவில் அவர் தம் வீட்டில் படுத்ததே இல்லை. உப்பு கடையிலேயே படுத்து உறங்கினார்.

(கங்கை பகீரதன் எழுதிய "மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்' நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.