டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குதிரைப் பந்தயம்!

குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள்  எகிப்தியர்கள்.

News image
Updated On :17 ஏப்ரல் 2022, 12:30 am

DIN

குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள்  எகிப்தியர்கள்.

குதிரையை சரியான முறையில் பழக்கி தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப  செயல்பட வைத்தவர்  சிவப்பிந்தியர்கள்.

குதிரையைப் போர்களுக்குப் பயன்படுத்திய பெருமை இந்திய அரசர்களைச் சாரும்.  பின்னர், உலக நாடுகள்  குதிரையை விளையாட்டுகளுக்கு  பயன்படுத்தத் தொடங்கின.  இதன் விளைவாகத் தோன்றியதுதான்  குதிரைப் பந்தயங்கள்.

எகிப்து,  பாபிலோனியா,  சிரியா போன்ற  நாடுகளில்   குதிரைப் பந்தயம் பிரசித்திப்பெற்றது.

முதன்முதலாக  குதிரைப் பந்தயம்  இங்கிலாந்து  நாட்டில்  12-ஆம் நூற்றாண்டில்  நடத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, அரேபியா, துருக்கி,  பெர்சியா ஆகிய  நாட்டு வணிகர்கள்  குதிரைகளை  இறக்குமதி  செய்து பந்தயத்திற்குப் பயன்படுத்தினர்.  அரேபியா நாட்டுக் குதிரைக்கு  மவுசு  அதிகம்.

குதிரைப் பந்தயத்திற்காக   சட்டங்கள்  1751-ஆம் ஆண்டு இயற்றப்பட்டன.  1798 - ஆம் ஆண்டு குதிரைப் பந்தயம்  குறித்த முதல் செய்தித்தாள் வெளியானது.18-ஆம் நூற்றாண்டில்  இங்கிலாந்தில்  குதிரைப் பந்தயம்  மிகவும்  முக்கிய  இடத்தைப்  பிடித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.