திரைக் கதிர்

விஜய் தேவரகொண்டாவின் கதை தேர்வு: அடுத்த அத்தியாயம் என்ன?
திரைக் கதிர்

விஜய் தேவரகொண்டா, கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டவேண்டிய நெருக்கடி உருவாகியிருக்கிறது. "குஷி', "லைகர்' என அடுத்தடுத்து ஃப்ளாப் படங்கள் கொடுத்தவர் "தி ஃபேமிலி ஸ்டார்' படத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் நோக்கினார். சமீபத்தில் ரிலீஸான அந்தப் படமும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதில், விஜய் தேவரகொண்டா ரொம்பவே சோர்ந்து போய் விட்டாராம். இத்தனைக்கும் கதைத் தேர்வுக்காகத் தனிக்குழுவையே உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய். சீக்கிரமே தடாலடியான மாற்றங்களுக்குத் தயாராகிறார் விஜய்.

-----------------------------------------

வாராவாரம் ஆரவாரம் என்பது போல, விதவிதமான போட்டோஷூட்கள் செய்து வருகிறார் ரைசா வில்சன். இப்போது... தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகவிருக்கும் "தி சேஸ்' படத்தை முடித்திருக்கிறார். அதன் போஸ்டர்கள் ஹாரராக மிரட்டினாலும், "தி சேஸ்', திகில் படம் கிடையாது. ஒரு குழந்தையின் பின்னணியில் நடக்கற உணர்வுபூர்வமான கதை'' எனச் சொல்லும் ரைசா, இந்தக் கோடையைக் கொண்டாட காஷ்மீர் பறந்திருக்கிறார்.

-----------------------------------------


"பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பின், விக்ரம் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் "தங்கலான்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு, அடுத்த படத்திற்கு தயாரானார். சென்ற ஆண்டில் வெற்றி பெற்ற பல படங்களின் அறிமுக இயக்குநர்கள் உட்பட பலரிடம் அவர் கதைகள் கேட்டுவந்தார். அதில் "சித்தா' அருண்குமார் சொன்ன கதை பிடித்துவிட, உடனே முழுக்கதையையும் ரெடி பண்ணச் சொல்லிவிட்டார் விக்ரம். இதில் விக்ரமின் தோற்றம் பேசப்படும் என்கின்றனர்.

-----------------------------------------


நடிகர் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டப் பேரவைத் தேர்தலை குறி வைத்து வேலை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஷாலும் 2026 - ஆம் ஆண்டில் கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என இப்போது அறிவித்திருக்கிறார். தனிக்கட்சியா அல்லது ஏற்கெனவே இருக்கும் கட்சிகளில் இணைகிறேனா என்பதையெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் விஷால்.

-----------------------------------------


ஜான்வி கபூர் வழக்கமாக எங்கு சென்றாலும் சிகர் பஹாரியாவுடன் செல்வதுதான் வழக்கம். சிகர் பஹாரியா மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயின் பேரன். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இருவரும் காதலிப்பதாக பாலிவுட்டில் நீண்ட நாள்களாகப் பேச்சு அடிபட்டு வருகிறது. ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் கூட அதனை சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் ஜான்வி கபூர் அது குறித்து எதுவும் சொல்லாமல் இருந்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் வெளியான "மைதான்' படத்தின் சிறப்புக் காட்சியைக் காண ஜான்வி கபூர் தன் தந்தை போனி கபூர் சகோதரர் அர்ஜுன் கபூருடன் வந்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com