'பக்கத்து வீட்டு வாழை குலை தள்ளிடுச்சி பார்த்திங்களா?'
'குலையைத் தொட்டால் கொலை விழும்னு எழுதி வெச்சிருப்பதையும் படிச்சேன்..'
-அ.செந்தில்குமார்,
சூலூர்.
'அந்த ஓட்டலில் ஒரு தடவைதான் சட்னி, சாம்பார் ஊத்துவாங்க?'
'ஓ.. அப்போ டிப்ஸ் வாங்க மாட்டாங்களா?'
'ஏம்பா? தர்மம் வேணாங்கிறே?'
'ஊசி போன தர்மம் எல்லாம் நான் வாங்கிறது இல்லை தாயி..'
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
'டி.வி மெகா சீரியல் எடுத்த அந்தத் தயாரிப்பாளர் பாவம் இப்போ சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறாரு?'
''பெண்களோட கண்ணீர் சும்மா விடும்மா?'
'என் மனைவி தூக்கத்துல எழுந்து சமையல் பண்றா?'
'சரி இதுக்கு போய் நீங்க ஏன் வருத்தப்படறீங்க?'
'அவ என்னை எழுப்பி சாப்பிட சொல்றாளே..'
- தீபிகா சாரதி,
சென்னை.
'மசால் தோசை கேட்டேனே என்ன ஆச்சி..?'
'தோசை மாஸ்டருக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருக்கேன். ரெடியானதும் வந்துடும்..'
'நகை மாளிகை கேன்டீனில் போய் என்னடா கேட்டே..?'
'ஹால்மார்க் இட்லி இருக்கான்னு கேட்டேன்...'
-ஏ.நாகராஜன்,
பம்மல்,
'எதுக்கு விமலா பத்து டீ ஸ்பூன் வச்சிருக்கே?'
'சாம்பாருக்கு பத்து டீ ஸ்பூன் மிளகாய் தூள்
போடணும்னு போட்டிருக்கே அதான்.'
'பூனை எல்லா பாலையும் குடிக்கற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?'
'இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்துக்கிட்டே இருந்தேன்டி'
'அந்த ஹைடெக் திருமணத்தில் அவர் மட்டும்
இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்காரே..?'
'அவருக்கு இன்னும் ஓ.டி.பி. நம்பர் வரலியாம்..'
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்,
சென்னை.
'என்னய்யா இது? டிபன் பிளேட் பக்கவாட்டில் நகருது?'
'அடுத்தவருக்கு பிளேட் ஈர்ப்பு சக்தி இருக்து சார்..'
'பேப்பர் தோசை ஏன் கிழிந்திருக்கு...'
'இது கிழிசல் பேப்பர் தோசை...'
'விரல் காயத்துக்கு பஞ்சு வைச்சி கட்டவா?'
''பஞ்சு மிட்டாய் வைச்சி கட்டு டாடி'
'என்னய்யா சர்வர்? சுண்டெலி உட்கார்ந்து மசால் வடை சாப்பிடுது..'
''விரட்ட முடியாதுங்க சார்.. அதுவும் ஒரு பக்கம் சாப்பிட்டுட்டு போகட்டுமே..'
'ரவா தோசையில் எதுக்கு இத்தனை மிளகு..'
'இது பெப்பர் ரவா தோசை..'
-பர்வதவர்த்தினி,
பம்மல்.