தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

குட்டி குட்டி கதைகள்...

தனக்கு ஆலையில் வேலை இருப்பதால், தனது மனைவியை சென்னைக்கு ரயிலேற்றிவிடுமாறு கார் டிரைவரிடம் கூறினார் தணிகாசலம்.

News image
Updated On :26 ஜூலை 2025, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

ரயில் கிளம்பிடுச்சு...

தனக்கு ஆலையில் வேலை இருப்பதால், தனது மனைவியை சென்னைக்கு ரயிலேற்றிவிடுமாறு கார் டிரைவரிடம் கூறினார் தணிகாசலம். கார் டிரைவரும் முதலாளியம்மாவின் பொருள்களை ரயிலில் ஏற்றி, இருக்கையின் கீழும், அருகிலும் வைத்துகொண்டிருக்கும்போதே ரயில் கிளம்பிவிட்டது.

மெதுவாகச் செல்லும்போதே ரயிலில் இருந்து இறங்கிவிடலாம் என்று யோசித்த டிரைவர், ரயில் பெட்டியின் நுழைவுவாயில் அருகே வந்தபோது, முதலாளியம்மா நடைமேடையில் கைப்

பேசியில் பேசிக் கொண்டிருந்தார். முக்கியமான நேரத்தில் கைப்பேசியில் பேசியதால், என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா?

-இரா.சிவானந்தம், கோவில்பட்டி.

Story image

தொல்லை...

'என்னங்க.. நீங்க வளர்க்கும் குட்டி நாய் ரொம்பத் தொல்லை செய்யுது.. எங்காவது விட்டு வாங்க?' என்று தொல்லை செய்துகொண்டிருந்த மனைவி கமலாவின் பேச்சைக் கேட்டு, மணியும் நாயை காரில் அழைத்துகொண்டு பக்கத்து கிராமத்துக்குச் சென்று விட்டு வந்தார். அவர் வீடு வந்தவுடன் பின்தொடர்ந்து நாயும் வந்துவிட்டது.

'என்ன செய்வது?' என்று யோசித்த மணி மறுநாள் நாயை அழைத்துகொண்டு, பத்து கி.மீ. தள்ளியுள்ள கிராமத்தில் சென்றுவிட்டு விட்டுவேறு வழிகளில் சுற்றிவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது கமலா கைப்பேசியில் அழைத்து, 'என்னங்க.. நாயே வந்துவிட்டது.. நீங்க இன்னும் வரவில்லையே..?' என்று கேட்டார். மணியோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார்.

நம்ம சொந்தமாக இருக்கிறதைப் பிரித்தா இந்த நிலைதான்.

-க.அருச்சுனன், செங்கல்பட்டு.

Story image

அவ்வளவுதான்...

ஒரு இளைஞர் வளர்த்த வளர்ப்புக் கிளி ஓயாமல் இருமிக் கொண்டிருந்தது. தான் புகைப்பதால்தான் அதற்கு அந்த நிலை என்று எண்ணி, கிளியின் முன் புகைப்பதை நிறுத்தினார். இருந்தாலும், கிளி இருமிக் கொண்டே இருந்தது.

கிளியை மருத்துவரிடம் இளைஞர் அழைத்துச் சென்றார். மருத்துவரும் பரிசோதித்து, 'இந்தக் கிளிக்கு ஒரு நோயும் இல்லை. புகை பிடிக்கும் தனது எஜமானர் மாதிரி, இருமிப் பார்க்கிறது. அவ்வளவுதான்' என்றார். இளைஞருக்கோ என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.