போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சமணர் சிலை

மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெற்குன்றம் கிராமத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் பத்தாம் நூற்றாண்டுக் கால சமண சமய காலச் சிலையானது காண்போரை வியக்க வைத்து, வணங்கும் நிலையில் உள்ளது.

News image
Updated On :24 மே 2026, 8:05 pm IST

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெற்குன்றம் கிராமத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் பத்தாம் நூற்றாண்டுக் கால சமண சமய காலச் சிலையானது காண்போரை வியக்க வைத்து, வணங்கும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து ஸ்தபதி சுந்தரமூர்த்தி கூறியது:

'இந்தக் கிராமத்தில் 10-ஆம் நூற்றாண்டு காலத்தில் சமண சமயத்தார் வழிபட்ட தீர்த்தங்கரர் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட சிலை உள்ளது. தற்சமயம் அந்த சிலையின் பாதி மண்ணில் புதைந்தும், புதர் சூழ்ந்தும் உள்ளது. சிலையின் மேற்புறம் இருவர் சாமரம் வீசிக்கொண்டும் முக்குடை பிண்டிமரம், சிம்மபீடம் உள்ளிட்ட அமைப்புகளுடன் காணப்படுகிறது.

சோழர் காலத்தில் சமண சமய மக்கள் வழிபடும் வகையில் இந்தப் பகுதியில் கோயில் இருந்திருக்கலாம் என்றும், இயற்கை இடர்ப்பாடுகளாலோ, அந்நிய மன்னர்களாலோ படையெடுப்புகளாலோ இந்தச் சிலை சிதைந்து போயிருக்கக் கூடும்.

இந்த சிலையின் அருகே யாரும் செல்லமாட்டார்கள். சிலையை தொட்டாலோ, அந்த வழியாகச் சென்றாலோ வயிற்று வலி வரும் எனக் கூறப்படுவதால் யாரும் செல்லமாட்டார்கள். ஆனால், அது தேவையற்ற வீண்வதந்தியாகும்' என்கிறார் சுந்தரமூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.