கோரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஒரு புதிய நான்காண்டு இளம்நிலைப் பட்டப்படிப்பை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கல்விநிலையத்தில் ஏற்கெனவே ஐந்தாண்டு பட்டப் படிப்பான எம்.எஸ்ஸி படிப்பு இருந்து வருகிறது.
அந்தப் படிப்புக்குப் பதிலாக இந்த புதிய நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்பை ஐஐடி -கோரக்பூர் வழங்குகிறது.
இந்த பேச்சிலர் ஆஃப் சயின்ஸ் (பிஎஸ்) நான்காண்டு பட்டப் படிப்பைப் படிப்பவர்கள், மாஸ்டர் ஆப் சயின்ஸ் (எம்எஸ்) படிப்பைத் தொடர விரும்பினால், தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காண்டு படிப்பின் இறுதி செமஸ்டரான ஆறாவது செமஸ்டரின்போது, மாணவர்கள் ஐந்தாண்டு படிப்புக்காக விண்ணப்பிக்கலாம்.
அவர்களுடைய பத்தாவது செமஸ்டரின்போது, ஐந்தாண்டு எம்எஸ் படிப்பை முடித்துவிடலாம்.
இந்த நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்பில்
அப்ளைடு ஜியாலஜி,
கெமிஸ்ட்ரி,
எகானாமிக்ஸ்,
எக்ஸ்ப்ளோரேஷன் ஜியோ பிசிக்ஸ்,
கணிதம் மற்றும் கம்ப்யூட்டிங்,
பிசிக்ஸ் ஆகிய பிரிவுகள் உள்ளன.
இந்தப் பாடப் பிரிவுகளுக்கான விரிவான பாடத்திட்டங்கள், ஐஐடி கோரக்பூரின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



