எதையும் சாதிக்க..
எதையும் சாதிக்க குழந்தையைப் பெற்றெடுத்த தாய் மருத்துவரிடம் "தன் குழந்தையைப் பார்க்க வேண்டும்' என்று கேட்டார்.


குழந்தையைப் பெற்றெடுத்த தாய் மருத்துவரிடம் "தன் குழந்தையைப் பார்க்க வேண்டும்' என்று கேட்டார்.
அதற்கு மருத்துவர் "ஓர் அதிர்ச்சியான செய்தி. மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்' என்றார்.
அதைக் கேட்ட தாய் பதைபதைத்து அழுகையுடன் "என் குழந்தை இறந்து போய்விட்டதா?' என்று கேட்டார்.
மருத்துவர் பதில் சொன்னார் ""குழந்தை இறந்திருந்தால் கூடப் பரவாயில்லை! ஆனால் பார்வையற்று, செவிட்டுத் தன்மையுடன் அதுவும் பெண் குழந்தையாய் பிறந்துவிட்டது'' என்றார் வேதனையோடு.

""குருடாய், செவிடாய் எப்படி வாழப் போகிறதோ?'' எனக் கண்ணீர் விட்டபடியே அக்குழந்தையை வளர்த்தார் தாய். ஆனால், அப்பெண் குழந்தைதான் சரித்திரம் படைத்தது. தன் நுகரும் திறனாலும், தொடும் உணர்வாலும், கடின உழைப்பாலும் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டு எண்ணற்ற புத்தகங்களை எழுதி "முயற்சி செய்தால் பிறவி ஊனத்தை உடைத்தெறிந்து எதையும் சாதிக்க முடியும்' என உலகுக்கு உணர்த்திய ஹெலன் கெல்லர்.
("அறிஞர்கள் வாழ்வில்' எனும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...