அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பூண்டின் மகிமை

நாம் தினசரி உணவில் உபயோகப்படுத்தும் பூண்டில் பல மருத்துவ குணம் உள்ளது. பூண்டு என்பது குட்டி மருத்துவர் போன்று செயல்படக்கூடியது. 

News image
Updated On :25 நவம்பர் 2015, 5:58 am

ரிஷி

நாம் தினசரி உணவில் உபயோகப்படுத்தும் பூண்டில் பல மருத்துவ குணம் உள்ளது. பூண்டு என்பது குட்டி மருத்துவர் போன்று செயல்படக்கூடியது.  இதனால் சாப்பிடும்போது பிடிக்கவில்லையென்று  பூண்டை தூக்கியெறியாமல் சாப்பிட வேண்டும். பூண்டின் சில மருத்துவ குணங்கள்.

இதோ:

  பூண்டை பொடியாக நறுக்கி பாலுடன் சேர்த்து காய்ச்சி உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும்.

  நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுகோளாறு நீங்கிவிடும்.

  பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து, சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.

  ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கொண்டால் வாத நோய் கட்டுப்படும்.

  பூண்டுச் சாறுடன் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப்படும்.

  பூண்டை சிறிதளவு நீர்கலந்து  நசுக்கி சாறெடுத்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து உட்கொண்டால் இருமல் கட்டுப்படும்.

  பூண்டை நசுக்கி ஒரு டம்ளர் சூடானபாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உருவாகும் வீக்கம் குறையும்.  ரத்தக் கொதிப்பும் கட்டுப்படும்.

  பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம் சூட்டில் மைபோல் அரைத்துத் தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால் தொண்டை வீக்கம் குறையும்.

- கீதா ஹரிஹரன்

சேற்றுப் புண் குணமாக...

  சிறிதளவு  மஞ்சள் துண்டுகளை நன்றாக அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய்யைச் சேர்த்து சேற்றுப் புண் உள்ள இடத்தில் இரவில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

   வெந்நீரில் உப்பு போட்டு அதில் கால்கள் நனையும்படி பத்து நிமிடம் வைத்திருந்து  எடுத்து பிறகு கால்களைத் துடைத்துவிட்டு வாசலின் தடவி வர விரைவில் சேற்றுப் புண் குணமாகும்.

  காய்ச்சிய வேப்பெண்ணெய்யை  மிதமான சூட்டுடன் தடவி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.

  மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து தடவி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.

  கடுக்காயை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

  சிற்றாமணக்கு, சுண்ணாம்பு கலந்து இரவில் சேற்றுப்புண்ணின் மீது தடவி வர விரைவில் குணமாகும்.

  மருதாணி இலையை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் வாரம் இரண்டு முறை  தடவி வர சேற்றுப்புண் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.