ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

கூந்தல் டிப்ஸ்

நெல்லிப் பொடியைத் தயிரில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்கு வளரும்.

News image
Updated On :26 ஏப்ரல் 2016, 8:18 pm IST
  • நெல்லிப் பொடியைத் தயிரில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்கு வளரும்.

  • பெண்களுக்கு நரை விழாமல் இருக்க கறிவேப்பிலைத் துவையல், வெங்காயம், கீரை மற்றும் பசும்பால், பூசணிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

  • வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை அலசி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.

  • நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை நீங்கி முடி கறுப்பாகமாறும்.

  • கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.

  • வெந்தயம், குன்றிமணிப் பொடி ஆகியவற்றை தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து ஒரு வாரத்திற்கு தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

  • செம்பருத்திப் பூக்களை காயவைத்து தூள் செய்து கொண்டு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தடவி வந்தால் முடி கருப்பாகும்.

  • முடி உதிர்ந்த இடத்தில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலைக்கு தடவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.