15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் 

பாலிவுட் நடிகை சன்னிலியோன், கடந்த ஆண்டு ஜூன் 21- ஆம் தேதி நிஷா என்ற 21 மாத பெண்குழந்தையை தத்தெடுத்தார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 10:12 am IST

பாலிவுட் நடிகை சன்னிலியோன், கடந்த ஆண்டு ஜூன் 21- ஆம் தேதி நிஷா என்ற 21 மாத பெண்குழந்தையை தத்தெடுத்தார். அதே நாளில் வெளிநாட்டு வாடகை தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்த சன்னிலியோன், தன் கணவர் டேனியல் வெப்பருடன் சேர்ந்து அதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டார். கடந்த மார்ச் மாதம் நோவா மற்றும் அஷர் என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்துள்ள தகவல் இவர்களுக்கு கிடைத்தது. இது குறித்து சன்னி லியோன் கூறியதாவது, "எட்டு மாதத்திற்குள் எங்களுக்கு 3 குழந்தைகள் கிடைத்துவிட்டன. இப்போது நாங்கள் ஒரு முழுமையான குடும்பமாகிவிட்டோம். இது கடவுளாக பார்த்து எங்களுக்கு அளித்த செல்வங்களாக கருதுகிறோம். விரைவில் இரட்டை குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வரவுள்ளோம்'' என்றார்.
 - அ. குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.