வாசனையுள்ள மலர் இது!

சமீபத்தில்  நடந்து முடிந்த ஆசிய  போட்டியில்,  இந்திய பெண்கள்  கபடி அணிக்கு   வெள்ளிப்பதக்கம்  கிடைத்தது.  இந்த அணியில்  உள்ள வீராங்கனைகளில்  பெங்களூரு  உஷா ராணியும்  ஒருவர்.
வாசனையுள்ள மலர் இது!
Updated on
1 min read

சமீபத்தில்  நடந்து முடிந்த ஆசிய  போட்டியில்,  இந்திய பெண்கள்  கபடி அணிக்கு   வெள்ளிப்பதக்கம்  கிடைத்தது.  இந்த அணியில்  உள்ள வீராங்கனைகளில்  பெங்களூரு  உஷா ராணியும்  ஒருவர்.

உஷா ராணி  மிகவும் வறுமையான குடும்பத்தில்  பிறந்து வளர்ந்தவர். இவர்களுடைய  குடும்பத் தொழில் பூ தொடுப்பது.

இவருடைய  அம்மா புட்டம்மா, மற்றும்  இரு சகோதரிகள்  என அனைவரும் இணைந்து  உதிரிப்பூவை மொத்தமாக  வாங்கி,  அவற்றை  1 கிலோவிற்கு 10 ரூபாய்  கூலியாகப்  பெற்று தொடுத்துத்தருவர்.

உஷா  படித்ததால், இன்று பெங்களூரு   தொட்டப் பல்லப்பூர்  போலீஸ் நிலையத்தில்  கான்ஸ்டபிளாக  பணி புரிகிறார்.

வெள்ளிப் பதக்கம் ... உஷாவுக்கு  சப் இன்ஸ்பெக்டர்   ப்ரோமோஷனை பெற்றுத் தருமா? என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com