/
- குழந்தைகளுக்கு சிறந்த உணவுத் தாய்பால், சீரகத்தைப் பொடி செய்து சிறிது சர்க்கரை சேர்த்து பாலில் கலந்து குடிக்க பால் பெருகும். குழந்தைகளுக்குப் போதிய தாய்ப்பால் கிடைக்கும். மேலும் குழந்தைகளுக்கு பால் விரைவில் சீரணமாகும். அரிசிக் கஞ்சியில் வெந்தயத்தை பொடி செய்து சேர்த்துக் குடித்துவர தாய்ப்பால் கிடைக்கும்.
- பத்து கிராம் உரித்த பூண்டை பாலில் வேகவைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் வெளியேறும்.
- ஓமத்தை வறுத்து, பொடித்து ஒரு கிராம் வீதம் நீருடன் உட்கொள்ள வாயுத்தொல்லை விலகும்.
- சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பினை வாயிலிட்டு மென்று தின்ன அசீரணம், மலச்சிக்கல், வாந்தி போன்றவைகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
- முட்டைகோஸ் சூப் அல்லது முட்டைக்கோஸ் இடித்து பிழிந்த சாறு தினம் காலையில் இரண்டு அவுன்ஸ் குடித்துவர குடற்புண் குணமாகும்.
- வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, படை போன்றவை குணமாகும்.
- பேரீச்சம் பழங்களைத் தினமும் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்து நரம்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கின்றது.
- புதினா இலையை அடிக்கடி உணவில் உபயோகப்படுத்தி வருவதால் தேவை இல்லாமல் உடலில் சேரும் கொழுப்பு குறையும்.
- பசும்பாலை கறந்த சூட்டுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து மூன்று நாள் விடியற்காலையில் சாப்பிட சளி, கபம் இல்லாத வரட்டு இருமல் தீரும்.
- குழந்தை பிறப்பதற்கு முன்னும் பிறந்த பின்னும் தாய்மார்கள் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும், குழந்தையும் நன்கு வளரும்.
- கருவுற்ற தாய்மார்கள் வல்லாரைக் கீரை, தூதுவளைக் கீரை போன்றவற்றை சாப்பிடுவதால் ஆரோக்கியமும், புத்திசாலித்தனமும் உள்ள குழந்தையைப் பெறுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.34! 6 காசுகள் உயர்வு!

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



