ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமையல் குறிப்புகள்...

பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டை வெட்டிப் போட்டால் குழம்பில் கசப்பே தெரியாது.

News image
Updated On :14 மே 2020, 4:57 pm

பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டை வெட்டிப் போட்டால் குழம்பில் கசப்பே தெரியாது.

பாயசம், கேசரி போன்றவைக்கு அரிசி, ரவை வெந்த பிறகே சர்க்கரையைச் சேர்க்க வேண்டும்.

பாலில் எலுமிச்சம் பழம் பிழிந்து கொதிக்க வைத்து வடிகட்டவும். பனீர் கிடைக்கும். பனீர் போக எஞ்சியுள்ள திரவத்தைக் கொட்டாமல் சூப், குருமா போன்றவற்றில் சேர்க்கவும். சப்பாத்தி பிசையவும் பயன்படுத்தலாம்.

கறுத்தப் புளியில் சாம்பார் வைத்தால் சாம்பார் கறுப்பாக இருக்கும். அதற்கு சிறிது தேங்காய்ப்பால் விட்டால் கறுப்பு நிறம் மாறி சாம்பாரும் டேஸ்ட்டாக இருக்கும்.

தோசை மாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்கு சிறிது மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்து விடும். தோசையின் சுவையும் அலாதிதான்.

உருளைக்கிழங்கை பொரியல் செய்யும்போது அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்.

இரவில் சப்பாத்தியோ, பூரியோ மீதமாகிப் போனால் அவற்றுடன் தோலுடன் ஒரு உருளைக்கிழங்கைப் போட்டு மூடி வைத்தால் அப்படியே மிருதுவாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.