மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சமையல் டிப்ஸ்..

சமையலறையில் பல்லிகளின் தொல்லை இருந்தால் வெங்காயச் சருகுகளைப் போட்டு வைத்தால் ஓடி விடும்.

News image
Updated On :7 அக்டோபர் 2020, 12:30 am

அமுதா அசோக் ராஜா


சமையலறையில் பல்லிகளின் தொல்லை இருந்தால் வெங்காயச் சருகுகளைப் போட்டு வைத்தால் ஓடி விடும்.

 உளுந்து வடைக்கு அரைக்கும் மாவு நீர்த்துப் போய்விட்டால் சிறிது அவல் சேர்த்து வடை தட்டினால் சரியாகிவிடும் 

வீட்டுக்குப் பெயிண்ட்  அடித்து வாடை  அடித்தால் வீட்டின் மூலையில் சிறிது வெங்காயம் நறுக்கிப் போட்டால் பெயிண்ட் வாடை மறைந்துவிடும் 

 வறுத்த பட்டையை பொடிசெய்து நீரில் கலந்து பெண் பிள்ளைகளுக்குக் கொடுத்து வந்தால் கர்ப்பப்பை பலம் பெறும் 

 மிளகாய் அரைக்கும்போது சரியாக அரைபடாது.முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கலாம் 

பாகற்காய் குழம்போ கூட்டோ வைக்க சிறுசிறு துண்டுகளாக்கி கேரட்டைப் போட்டால் பாகற்காயின் கசப்பு தெரியாது 

ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டுமென்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்ந்து கிளற வேண்டும்!

சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைக்கவும். இந்தப் பொடியைப்போட்டு சாம்பார் செய்தால் சூப்பராக இருக்கும். திக்காகவும் இருக்கும் 

பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பும் டேஸ்ட்டும் கூடும் 

கடலைமாவு, அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சோடாமாவு சேர்க்காமலே பஜ்ஜி உப்பி வரும்

மதியம் அரைத்த மாவை இரவில் இட்லி,தோசை செய்ய வேண்டுமென்றால் மாவை மூடி வெயிலில் வைக்கவும். அல்லது மாவு உள்ள பாத்திரத்தை சூடான நீரிலும் வைக்கலாம். மாவு புளித்து இட்லி, தோசைக்கு சரியாக இருக்கும் 

மாவில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து வார்த்தால் தோசை சாஃப்ட்டாக, டேஸ்ட்டாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.