பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

காய்கறி சூப் 

வாணலியில் வெண்ணெய்யை சூடாக்கி,பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2021, 10:58 am

அமுதா அசோக் ராஜா

தேவையானவை: 

பீன்ஸ் - 10
கேரட் - ஒன்று
கோஸ் - 50 கிராம்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஒரு பல்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
மைதா மாவு (அ) சோள மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
பால் - ஒரு டம்ளர்
நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் வெண்ணெய்யை சூடாக்கி,பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.