தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும்போது மாவின் அளவிற்குத் தகுந்தாற்போல் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் போட்டு அரைத்து தயிர் வடை செய்தால் தயிர்வடை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
உளுந்தம் பருப்பு வடை செய்யும்போது சிறிது ஐஸ்கட்டியைச் சேர்த்து அரைத்து தேங்காய்த் துருவல் கலந்து வடை செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
மாங்காய்த் தொக்கு செய்யும்போது நெல்லிக்காய் அளவு வெல்லம் போட்டுக் கிளற, மாங்காய்த் தொக்கு சுவையாக இருக்கும்.
பூரி பொரிக்கும்போது எண்ணெய்யில் இரண்டு தேக்கரண்டி நெய்யைக் கலந்து பூரி செய்ய, அதன் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.
கொஞ்சம் புளி கரைத்த நீரில் ஒரு தக்காளிப் பழத்தைப் பிசைந்து விட்டு சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து, சிறிது சீரகத்தை கசக்கிப்போட்டு அடுப்பில் வைத்து எடுத்தால் ஐந்தே நிமிடத்தில் திடீர் ரசம் தயார்.
சாம்பாருக்கு துவரம்பருப்பு வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையாக இருப்பதுடன் சீக்கிரமாக ஊசியும் போகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


