காய்கறி வைத்தியம்!

உ யர் ரத்த  அழுத்தத்தைக் குறைக்க தினமும்  பூண்டை  உணவில் சேர்த்து வர வேண்டும்.
காய்கறி வைத்தியம்!

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்து வர வேண்டும்.

மூட்டு வலி இருப்பவர்கள் இஞ்சியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்து வலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டுக் கொண்டு வர வலி நீங்கும். அல்லது இஞ்சியை நறுக்கி நேரடியாகவே வலி இருக்கும் இடத்தில் தேய்த்துக் கொண்டாலும் வலி வீக்கம் குறையும்.

பப்பாளி, முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி போன்ற காய்கறிகளை உணவில் அடிக்கடிச் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும்.

வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போட தொண்டை வலி குறையும்.

பாலில் வெங்காயம், பூண்டு போட்டு வேகவிட்டு அந்தப் பாலை பருகி வர நெஞ்சில் சேர்ந்துள்ள சளி வெளியேறும்.

பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். அதுபோன்று ரத்தசோகை நோய் வருவதை யும் தடுக்கும்.

பாகற்காயை மதிய உணவில் அடிக்கடிச் சேர்த்து வர, ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல் தொடர்பான நோய்கள் குணமாக்கும்.

தினமும் 1 கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

ரத்தம் விருத்தியாக பொன்னாங்கண்ணிக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்த வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து பயன்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் தன்மையும் வெள்ளரிக்கு உண்டு.

இளம் வயதிலேயே சிலருக்கு நரை வரக் காரணம், வைட்டமின் கே சத்து பற்றாகுறையே, பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய் போன்றவற்றில் வைட்டமின் கே சத்து அதிகளவிஸ் உள்ளதால், இந்தக் காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மெல்ல மெல்ல இளநரை மறையும்.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் சக்தியும் வாழைத்தண்டில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com