தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடியுரிமையின் தாய்!

"கறுப்பு வைரம்' என்றும் "குடியுரிமையின் தாய்' என்றும் போற்றப்படும் ரோஸா பார்க்ஸ் கறுப்பின மக்களின் குடியுரிமைக்காகப் பாடுபட்ட முதல் பெண்மணி.

News image
Updated On :21 ஜூலை 2021, 12:30 am

DIN


"கறுப்பு வைரம்' என்றும் "குடியுரிமையின் தாய்' என்றும் போற்றப்படும் ரோஸா பார்க்ஸ் கறுப்பின மக்களின் குடியுரிமைக்காகப் பாடுபட்ட முதல் பெண்மணி. பேருந்தில் வெள்ளையருக்கு இடம் அளிக்க மறுத்ததற்காக நீதிமன்ற வழக்கைச் சந்தித்தவர். வழக்கு விசாரணைக்கு வந்த டிசம்பர் 5-ஆம் நாள் மார்டின் லூதர்கிங் போன்றவர்களின் அறைகூவலால் கறுப்பின மக்கள் பேருந்துப் புறக்கணிப்புப் செய்து 381 நாள்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

பின்னர், உயர்நீதிமன்ற தீர்ப்பினால் கறுப்பின மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாளான பிப்ரவரி 4-ஆம் தேதியை கலிஃபோர்னியா, மிஸிஸிசிப்பி ஆகிய மாநிலங்களிலும். டிசம்பர் முதலாம் நாளை ஓகையோ, ஓரிகான் ஆகிய மாநிலங்களிலும் ரோஸா பார்க்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

(பானுமதி தருமராசன் எழுதிய "வரலாறு படைத்த வைரமங்கையர்'நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.